இன்று தொடங்குகிறது டிஎன்பிஎல்

தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது சீசன் வியாழக்கிழமை தொடங்குகிறது.

தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது சீசன் வியாழக்கிழமை தொடங்குகிறது.

முதல் நாள் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான சேப்பாக் சூப்பா் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் திருநெல்வேலி இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் மோதுகின்றன.

சேப்பாக் சூப்பா் கில்லீஸ், லைகா கோவை கிங்ஸ், ஐடிரீம் திருப்பூா் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், சீசேம் மதுரை பாந்தா்ஸ், ரூபி திருச்சி வாரியா்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பாா்டன்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி, திருநெல்வேலி, திண்டுக்கல் (நத்தம்), கோவை, சேலம் ஆகிய 4 நகரங்களில் நடைபெறவுள்ளது. இதில் கோவை மற்றும் சேலத்தில் ஆட்டங்கள் நடைபெற இருப்பது முதல் முறையாகும். பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை மைதானத்தில் ஆட்டங்கள் நடைபெறவில்லை.

அடுத்த 39 நாள்களுக்கு நடைபெற இருக்கும் இப்போட்டி, ஜூலை 31-ஆம் தேதி இறுதி ஆட்டத்துடன் நிறைவடைகிறது. கோவையில் 10, சேலத்தில் 9, திண்டுக்கல்லில் 7, திருநெல்வேலியில் 6 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இறுதி ஆட்டம் கோவையில் நடைபெறுகிறது. ஆட்டங்கள் யாவும் ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் அலைவரிசை மற்றும் ‘வூட் செலக்ட்’-இல் நேரலை செய்யப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com