இந்தியா அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ருதுராஜ்க்கு பதிலாக தீபக் ஹூடா விளையாடியது ஏனென கேப்டன் ஹார்திக் பாண்டியா விளக்கம் அளித்துள்ளார்.
மழைக் காரணமாக போட்டி 12 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. அயர்லாந்து முதலில் பேட்டிங் விளையாடி 107 ரன்களை எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 9.2 ஓவரிலே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கடந்து வெற்றிப் பெற்றது. இப்போட்டியில் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட்க்கு பதிலாக தீபக் ஹூடா களமிறங்கினார். இதைக்குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறியதாவது:
ருத்துக்கு பின்னங்காலின் சதைப் பகுதியில் சிறிய பிரச்சனை இருந்தது. அவரை இந்நிலையில் விளையாட வைப்பது சரியான முடிவாக தோன்றவில்லை. எங்களுக்கு பேட்டிங் தரவரிசை ஒரு பிரச்சினையே இல்லை. எல்லாருமே ஒரு இடத்தில்தான் விளையாடுகிறோம். அவரது காயத்துடன் விளையாட நாங்கள் விரும்பவில்லை.