தன்னை அச்சுறுத்திய ஊடகவியலாளர் பெயரை பிசிசிஐயிடம் தெரிவித்தது குறித்து கருத்து தெரிவிக்க சஹா மறுத்துவிட்டார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரித்திமான் சஹாவுக்கு மூத்த ஊடகவியலாளர் ஒருவர் அச்சுறுத்தல் கொடுத்தது தொடர்பாக விசாரிக்க பிசிசிஐ கடந்த 25-ம் தேதி 3 பேர் அடங்கிய குழு அமைத்தது. இந்த விவகாரத்தில் ஊடகவியலாளரின் பெயரை வெளியிடமாட்டேன் என சாஹா முன்பு தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க | முன்கூட்டியே டிக்ளேர்? திட்டத்தைப் போட்டுடைத்த ஜடேஜா
இந்த நிலையில், பிசிசிஐ-யிடம் ஊடகவியலாளர் பெயரை வெளியிட்டது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது:
"இந்த உரையாடல் குறித்து பிசிசிஐ-யிடம் பேச வேண்டும் (ஊடகவியலாளர் பெயர் பிசிசிஐ-யிடம் வெளியிடப்பட்டதா, இல்லையா?). தங்களது முடிவு குறித்து பிசிசிஐ எதுவும் கூறவில்லை. இதற்கு பிசிசிஐ பதில் சொல்லும்."