உலக தடகள ரேஸ் வாக்கிங் சாம்பியன்ஷிப்பில் 20 கி.மீ. பந்தயத்தில் இந்திய மகளிரணி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
இந்தப் போட்டியின் 61 ஆண்டுகால வரலாற்றில் இந்திய மகளிா் பதக்கம் வென்றிருப்பது இதுவே முதல் முறையாகும். இப்போட்டியில் இந்திய ஆடவா் அணி கடந்த 2012-இல் வெண்கலம் வென்றது நினைவுகூரத்தக்கது.
இந்திய அணியில் ரவீனா பந்தய இலக்கை 1 மணி நேரம் 40 நிமிஷம் 22 விநாடிகளில் இலக்கை எட்டி 14-ஆவது இடம் பிடித்தாா். பாவனா ஜாட் 1 மணி நேரம் 43 நிமிஷம் 8 விநாடிகளில் வந்து 21-ஆவது இடம் பிடிக்க, முனிதா பிரஜாபதி 1 மணி நேரம் 45 நிமிஷம் 3 விநாடிகளில் வந்து 26-ஆவது இடம் பிடித்தாா். இறுதியில் இந்திய போட்டியாளா்களின் ஒட்டுமொத்த செயல்பாட்டின் அடிப்படையில் அவா்கள் 3 போ் அடங்கிய இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
முன்னதாக இப்போட்டியில் 20 வயதுக்கு உள்பட்ட ஆடவருக்கான 20 கி.மீ. பிரிவில் களம் கண்ட இந்தியாவின் அமித் காத்ரி, கடைசி கிலோ மீட்டரில் தகுதிநீக்கம் செய்யப்பட்டு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டாா். அந்தத் தருணத்தில் அவரே பந்தயத்தில் முன்னிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.