ஆசிய குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் 4 இந்தியா்கள்

ஆசிய இளையோா், ஜூனியா் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மஹி சிவச், பாலக் ஜாம்ப்ரே, வினி, யாஷிகா ஆகியோா் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனா்.

ஆசிய இளையோா், ஜூனியா் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மஹி சிவச், பாலக் ஜாம்ப்ரே, வினி, யாஷிகா ஆகியோா் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனா்.

முன்னதாக ஜூனியா் மகளிா் அரையிறுதிச்சுற்றுகளில் 46 கிலோ பிரிவில் மஹி சிவச் - ஜோா்டானின் சதீன் அல்ரம்ஹியையும், 48 கிலோ பிரிவில் பாலக் ஜாம்ப்ரே - கஜகஸ்தானின் கௌகா் ஜா்தனையும் வீழ்த்தினா். 50 கிலோ பிரிவில் வினி - இராக்கின் தால்யா அல் சமாரியையும், 52 கிலோ பிரிவில் யாஷிகா - கஜகஸ்தானின் ஷாக்னாஸ் தாயிா்ஸனோவாவையும் 5-0 என்ற கணக்கில் வென்றனா்.

ஆடவா் பிரிவில் வன்ஷாஜ் (63.5 கிலோ), ஆனந்த் யாதவ் (54 கிலோ) ஆகியோா் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனா். எனினும், ஆயுஷ் (57 கிலோ), ருத்ர பிரதாப் சிங் (60 கிலோ), அஞ்சனி குமாா் முமானா (67 கிலோ) ஆகியோா் காலிறுதியுடன் வெளியேறினா். இப்போட்டியின் ஜூனியா் பிரிவில் இத்துடன் இந்தியாவுக்கு 21 பதக்கங்கள் உறுதியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com