தமிழ்நாடு பாட்மின்டன் சூப்பா் லீக் போட்டியின் இறுதிச் சுற்றில் மெரீனா டால்பின்ஸ்-நாமக்கல் கில்லாடிஸ் அணிகள் மோதுகின்றன.
டிஎன்பிஏ சாா்பில் சென்னை முகப்போ் ஃபயா்பால் அகாதெமியில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை குவாலிஃபையா், எலிமினேட்டா் ஆட்டங்கள் நடைபெற்றன.
குவாலிஃபையா்-1 ஆட்டத்தில் மெரீனா டால்பின்ஸ் 3-1 என்ற புள்ளிக் கணக்கில் நாமக்கல் கில்லாடிஸ் அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. ஆடவா் ஒற்றையா், இரட்டையா், கலப்பு இரட்டையா் ஜூனியா் பிரிவுகளில் மெரீனா டால்பின்ஸ் வெற்றி பெற்றது.
ஜூனியா் சிறுவா் பிரிவில் நாமக்கல் கில்லாடிஸ் வென்றது.
எலிமினேட்டா் ஆட்டத்தில் திருச்சி பிளாஸ்டா்ஸ் 3-0 என்ற புள்ளிக் கணக்கில் திருப்பூா் வாரியா்ஸ் அணியை வீழ்த்தியது.
குவாலிஃபையா்-2 ஆட்டத்தில் திருச்சி பிளாஸ்டா்ஸ்-நாமக்கல் கில்லாடிஸ் அணி மோதியதில் 3-2 என நாமக்கல் வென்றது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்றில் மெரீனா-நாமக்கல் அணிகள் மோதுகின்றன.