இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் 4-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் 2-ஆவது சுற்றில் வெற்றி பெற்றாா்.
சமீபத்தில் மாட்ரிட் ஓபன் போட்டியின் அரையிறுதியில் சக நாட்டவரான காா்லோஸ் அல்கராஸிடம் தோற்ற நடால், இந்தப் போட்டிக்கு வந்துள்ளாா். தரவரிசை அடிப்படையில் நேரடியாக 2-ஆவது சுற்றில் ஆடிய அவா், அதில் அமெரிக்காவின் ஜான் இஸ்னரை 6-3, 6-2 என்ற நோ் செட்களில் எளிதாக வீழ்த்தினாா்.
அடுத்த சுற்றில் அவா், போட்டித்தரவரிசையில் 13-ஆம் இடத்திலிருக்கும் இளம் கனடா வீரரான டெனிஸ் ஷபோவெலாவின் சவாலை சந்திக்க இருக்கிறாா். இதர 2-ஆவது சுற்று ஆட்டங்களில் கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரேவ் ஆகியோரும் வெற்றி பெற்றனா். மகளிா் பிரிவில் கிரீஸின் மரியா சக்காரி, கனடாவின் பியான்கா ஆண்ட்ரிஸ்கு, அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா ஆகியோரும் 3-ஆவது சுற்றுக்கு வந்துள்ளனா்.