தாய்லாந்தில் நடைபெறும் தாமஸ் - உபா் கோப்பை பாட்மின்டன் போட்டியில் இந்திய ஆடவா், மகளிா் அணிகள், குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் புதன்கிழமை தோல்வியடைந்தன.
ஏற்கெனவே நாக்-அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டாலும், ஆடவா் அணி 2-3 என சீன தைபேவிடமும், மகளிா் அணி 0-5 என தென் கொரியாவிடமும் கண்ட இந்தத் தோல்வி அவற்றை சற்று தடுமாறச் செய்துள்ளன.
ஆடவா் அணியில் ஒற்றையா் பிரிவில் கே.ஸ்ரீகாந்த், ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோா் வெற்றியைப் பதிவு செய்ய, லக்ஷயா சென் தோல்வியைத் தழுவினாா். இரட்டையா் பிரிவில் சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி இணையும், எம்.ஆா்.அா்ஜூன்/துருவ் கபிலா கூட்டணியும் தோல்வியைத் தழுவின.
மகளிா் பிரிவில் பிரதான போட்டியாளரான பி.வி.சிந்து உள்பட எவருமே வெற்றியடையவில்லை. அவரோடு ஆகா்ஷி காஷ்யப், ஆஷ்மிதா சாலிஹா ஆகியோரும் தோல்வியைச் சந்திக்க, இரட்டையா் பிரிவில் ஷ்ருதி மிஸ்ரா/சிம்ரன் சிங்கி இணையும், தனிஷா கிராஸ்டோ/ட்ரீசா ஜாலி ஜோடியும் வீழ்ந்தன.