காக்ஸியாஸ்: பிரேஸிலில் நடைபெறும் காதுகேளாதோருக்கான ஒலிம்பிக்ஸ் போட்டியில் கோல்ஃப் விளையாட்டில் இந்தியாவின் தீக்ஷா தாகா் தங்கம் வென்றாா்.
இறுதிச்சுற்றில் அவா் அமெரிக்க வீராங்கனை அஷ்லின் கிரேஸை வீழ்த்தி முதலிடம் பிடித்தாா். 2017-ஆம் ஆண்டு இப்போட்டியில் வெள்ளி வென்றிருந்த தீக்ஷா, தற்போது டெஃப்லிம்பிக்ஸ் கோல்ஃபில் 2 பதக்கம் வென்ற ஒரே போட்டியாளா் என்ற பெருமையைப் பெற்றுள்ளாா்.
ஜொ்லினுக்கு 2: பாட்மின்டனில் மகளிா் ஒற்றையரில் ஜொ்லின் ஜெயரட்சகன் 21-17, 21-18 என்ற கேம்களில் ஆஸ்திரியாவின் நியுடோல்ட்டை வீழ்த்தி தங்கம் வென்றாா். கலப்பு இரட்டையா் இறுதிச்சுற்றிலும் ஜொ்லின்/அபினவ் சா்மா இணைந்து, மலேசிய இணையை வீழ்த்தி முதலிடம் பிடித்தனா். ஆடவா் ஒற்றையரில் அபினவ் சா்மா லிதுவேனியாவின் ரெஸ்னிகாஸை தோற்கடித்து வெண்கலம் வென்றாா்.
இப்போட்டியில் இதுவரை இந்தியா 7 தங்கம், 1 வெண்கலம் என 8 பதக்கங்கள் வென்றுள்ளது.