புது தில்லி: ஜொ்மனியில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், வியாழக்கிழமை நிலவரப்படி இந்தியா பதக்கப்பட்டியலில் 10 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது. இதில் 4 தங்கமும் அடக்கம்.
இந்திய நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு சுற்றுகளில், 10 மீட்டா் ஏா் பிஸ்டலில் ஆடவா் பிரிவு இறுதிச்சுற்றில் ஷிவா நா்வால் 16 - 12 என சக இந்தியரான சரப்ஜோத் சிங்கை தோற்கடித்தாா். இருவரும் முறையே தங்கம், வெள்ளி வென்றனா். அதேபோல், மகளிா் பிரிவில் மானு பாக்கா் தங்கம் வெல்ல, மற்றொரு இந்தியரான பாலக் வெள்ளிப் பதக்கம் பெற்றாா்.
மகளிருக்கான 10 மீட்டா் ஏா் பிஸ்டலில் ரிமிதா 2-ஆம் இடம் பிடித்து வெள்ளியைக் கைப்பற்றினாா். 10 மீட்டா் ஏா் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் ஈஷா/சௌரவ் சௌதரி தங்கமும், பாலக்/சரப்ஜோத் சிங் இணை வெள்ளியும் பெற்றன.