திருநெல்வேலி: தென்னிந்திய இருபாலர் வாலிபால் போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை (மே 13) தொடங்குகிறது.
திருநெல்வேலி ஷிஃபா மருத்துவமனை, மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் நடத்தப்படும் இப்போட்டி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.
லீக் முறையில் நடைபெறும் போட்டியில், ஆடவர் பிரிவில் தமிழ்நாடு காவல் துறை, சென்னை எஸ்ஆர்எம் கல்லூரி, மத்திய கலால் துறை, இந்தியன் வங்கி அணிகளும், மகளிர் பிரிவில் கேரள காவல்துறை, சென்னை எஸ்ஆர்எம் கல்லூரி, மதுரை அமெரிக்கன் கல்லூரி, ஈரோடு பிகேஆர் கல்லூரி அணிகளும் பங்கேற்கின்றன.