கோவில்பட்டியில் நடைபெறும் 12-ஆவது தேசிய ஜூனியர் ஆடவர் ஹாக்கி போட்டியில் புதன்கிழமை ஆட்டத்தில் தில்லி, பஞ்சாப், மணிப்பூர் அணிகள் வெற்றி பெற்றன.
போட்டியின் 2-ஆவது நாளான புதன்கிழமை காலை 6.30 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தில்லி 7-2 என்ற கோல் கணக்கில் உத்தரகண்டை வென்றது. 2-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் 3-0 என்ற கணக்கில் ஆந்திர பிரதேசத்தை சாய்த்தது.
மாலை 4 மணிக்கு நடைபெறவிருந்த 3-ஆவது ஆட்டத்தில் மகாராஷ்டிரம் - மிúஸாராம் அணிகள் மோதுவதாக இருந்தது. எனினும், மிúஸாராம் ஆட்டத்தில் பங்கேற்காததால் மகாராஷ்டிம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற 5-ஆவது ஆட்டத்தில் மணிப்பூர் 8-1 என்ற கணக்கில் திரிபுராவை தோற்கடித்தது.
இன்றைய ஆட்டங்கள்: போட்டியின் 3-ஆவது நாளான வியாழக்கிழமை (மே 19) உத்தர பிரதேசம் - ஹிமாசல பிரதேசம், சண்டிகர் - மத்திய பிரதேசம், ஒடிஸா - ராஜஸ்தான், பிகார் - ஜம்மு காஷ்மீர், அஸ்ஸாம் - அருணாசல பிரதேசம் அணிகள் மோதுகின்றன.