தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த வீராங்கனையும் நடப்பு சாம்பியனுமான அகனே யமகுச்சியை, பி.வி.சிந்து எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 21-15 என முதல் செட்டை சிந்துவும், 2ஆவது செட்டை 22-20 என ஜப்பான் வீராங்கனையும் கைப்பற்றினர்.
வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் 3ஆவது செட்டில் சிந்து ஆரம்ப முதலே ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில் சிந்து, 21-13 என கைப்பற்றி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் உலகின் நான்காம் நிலை வீராங்கனையான சீனாவைச் சேர்ந்த யூ பை சென்யை சிந்து எதிர்கொள்கிறார்.