ஆசியக் கோப்பை ஹாக்கி: இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம் டிரா

ஆசியக் கோப்பை ஹாக்கியில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


ஆசியக் கோப்பை ஹாக்கியில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

ஆசியக் கோப்பை ஹாக்கியில் இந்திய அணி இன்று (திங்கள்கிழமை) பாகிஸ்தானை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே பாகிஸ்தான் கோல் அடிப்பதற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த வாய்ப்பை பாகிஸ்தான் தவறவிட்டது.

இதையடுத்து, 9-வது நிமிடத்தில் கார்த்தி செல்வம் இந்தியாவுக்கு முதல் கோலை அடித்தார். இதன்பிறகு, இந்திய அணி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து நிறைய பெனால்டி வாய்ப்பைப் பெற்றது. ஆனால், அவை கோலாக மாறவில்லை. அதேசமயம், பாகிஸ்தான் அணியையும் கோல் அடிக்கவில்லை.
 
இதனால், ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், 59-வது நிமிடத்தில் பாகிஸ்தான் அணிக்காக அப்துல் ராணா கோல் அடித்தார். இதன்பிறகு, இருஅணிகளிலும் மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை. இதனால், ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. 

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஜப்பானை எதிர்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com