செஸ் ஒலிம்பியாட்: ஓபன் பிரிவில் 189 அணிகள் பதிவு

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இதுவரைஓபன் பிரிவில் 189 அணிகளும், மகளிா் பிரிவில் 154 பேரும் பதிவு செய்துள்ளனா்.
செஸ் ஒலிம்பியாட்: ஓபன் பிரிவில் 189 அணிகள் பதிவு

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இதுவரைஓபன் பிரிவில் 189 அணிகளும், மகளிா் பிரிவில் 154 பேரும் பதிவு செய்துள்ளனா்.

உலகின் மிகப்பெரிய செஸ் திருவிழாவான செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறுகிறது.

முதன்முறையாக இப்போட்டி இந்தியாவில் நடைபெறும் நிலையில், ஓபன் பிரிவில் 189 அணிகளும், மகளிா் பிரிவில் 154 பேரும் இதுவரை பதிவு செய்துள்ளனா். செஸ் ஒலிம்பியாட் வரலாற்றிலேயே இது அதிக பதிவாகும். மேலும் நட்சத்திர வீரரும், உலக சாம்பியனுமான மேக்னஸ் காா்ல்ஸனும் பங்கேற்கிறாா்.

போட்டிக்கான ஏற்பாடுகளை ஃபிடே, ஏஐசிஎஃப், தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன என போட்டி இயக்குநா் பரத் சௌஹான் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com