பழனியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் தூத்துக்குடி இளைஞர் சாம்பியன் பட்டம் பெற்றார்.
தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் மற்றும் உடற்தகுதி சங்கம் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 200க்கும் மேற்பட்ட போட்டியாளர்கல் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
மேடையில் இசைக்கப்பட்ட இசைக்கு ஏற்ப அவர்கள் பார்வையாளர்களைக் கவரும் வகையில் தங்கள் கட்டுடலை காட்சிப்படுத்தினர். 55 கிலோ பிரிவில் திண்டுக்கல்லின் கோபி, 60 கிலோ பிரிவில் தேனியின் பாலகிருஷ்ணன், 65 கிலோ பிரிவில் தூத்துக்குடியின் லோகேஸ்வரன், 70 கிலோ பிரிவில் தூத்துக்குடியின் மந்திரமூர்த்தி, 75 கிலோ பிரிவில் தூத்துக்குடியின் மாரிசெல்வம், 75 கிலோவுக்கு மேற்பட்டோர் பிரிவில் ராஜா ஆகியோர் முதலிடம் பெற்றனர். போட்டி சாம்பியன் பட்டத்தை தூத்துக்குடியின் லோகேஸ்வரன் பெற்றார்.