இந்திய அணியில் நிராகரிப்பு: இன்ஸ்டகிராமில் வேதனையைப் பகிர்ந்த வீரர்கள்!

சாய் பாபா, நீங்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் என எண்ணுகிறேன்
இந்திய அணியில் நிராகரிப்பு: இன்ஸ்டகிராமில் வேதனையைப் பகிர்ந்த வீரர்கள்!


நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

டி20, ஒருநாள், டெஸ்ட் என நான்கு தொடர்களுக்கான அணியில் பல வீரர்கள் இடம்பெறாததால் சர்ச்சைகளும் எழுந்துள்ளன. பிருத்வி ஷா, பிஸ்னோய், ருதுராஜ் ஆகிய வீரர்களைத் தேர்வு செய்யாதது குறித்து ரசிகர்களும் நிபுணர்களும் தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்கள். இந்நிலையில் இந்திய அணிக்குத் தேர்வாகாத சில வீரர்கள் இன்ஸ்டகிராமில் தங்களுடைய வருத்தத்தையும் மனநிலையையும் மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

பிருத்வி ஷா: நீங்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் என எண்ணுகிறேன் சாய் பாபா.

நிதிஷ் ராணா: வலி முடியவடையும். நம்பிக்கையே காத்திரு. 

பிஸ்னோய்: பின்னடைவை விடவும் மீண்டு வருவது தான் எப்போதும் வலுவானதாக இருக்கும். 

உமேஷ் யாதவ்: உங்களால் என்னை ஏமாற்ற முடியும். ஆனால் கடவுள் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அறியுங்கள்

என தங்களுடைய உணர்வுகளைப் பல்வேறு விதமாக வெளிப்படுத்தியுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com