தில்லி கேபிடல்ஸ்: 19 வீரர்கள் தக்கவைப்பு; 4 வீரர்கள் விடுவிப்பு!

தில்லி கேபிடல்ஸ் அணியில் 19 பேர் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர். 4 பேர் மட்டுமே அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

2023 ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு மினி ஏலம் நடைபெற உள்ளதால் பல்வேறு அணிகளில் இருந்து பல வீரர்களை அந்தந்த அணிகள் விடுவித்துள்ளது. 

தில்லி கேபிடல்ஸ் அணியில் 19 பேர் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர். 4 பேர் மட்டுமே அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 

மந்தீப் சிங், கே எஸ் பரத், அஸ்வின் ஹெப்பர், டிம் சைபர்ட் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மற்ற 19 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளதாக தில்லி கேப்பிடல்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ரிஷப் பந்த், டேவிட் வார்னர், அக்‌ஷர் படேல், ப்ரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், அன்ரிச் நோர்கியா, கலீல் அஹ்மத், குல்தீப் யாதவ், லலித் யாதவ், சர்பராஸ் கான், லுங்கி இங்கிடி, பிரவின் டுபே, கமலேஷ் நாகர் கோட்டி, ரோமன் பாவெல், சேத்தன் சக்கரியா, யஷ் தயள், ரிபல் படேல், விக்கி ஒஸ்டல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com