உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்கநாள் ஆட்டத்தில் கத்தார் அணியை வீழ்த்தி ஈகுவடார் அணி வெற்றியை பதிவு செய்தது.
உலகின் 32 நாடுகள் கலந்துகொள்ளும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தொடக்க நாள் ஆட்டத்தில் கத்தாரும், ஈகுவடாரும் மோதின. அல்கோர் நகரில் உள்ள இல பேத் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய ஈகுவடார் அணியைச் சேர்ந்த என்னர் வேலன்சியா 2 கோல்கள் அடித்து அசத்தினார். இறுதிவரை கத்தார் அணி கோல் எதுவும் அடிக்காததால் ஈகுவடார் அணி வெற்றி பெற்றது.