இந்தியா - தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் மழை காரணமாகத் தாமதமாகத் தொடங்குகிறது.
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது தென்னாப்பிரிக்க அணி. டி20 தொடரை 2-1 என இந்தியா வென்றது. ஒருநாள் தொடர் இன்று முதல் லக்னெளவில் தொடங்குகிறது.
லக்னெளவில் இன்று காலை முதல் மழை பெய்வதால் ஆட்டம் தொடங்கத் தாமதமாகிறது. இதுகுறித்த ட்வீட் வெளியிட்ட பிசிசிஐ, டாஸ் நிகழ்வு தாமதமாகியுள்ளது. கூடுதல் தகவல்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளது.