காலிறுதியில் லக்ஷயா சென்

 டென்மாா்க் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

 டென்மாா்க் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவு 2-ஆவது சுற்றில் லக்ஷயா சென் 21-9, 21-18 என்ற நோ் கேம்களில் சக இந்தியரான ஹெச்.எஸ்.பிரணாயை 39 நிமிஷங்களில் வீழ்த்தினாா். சென்-பிரணாய் இத்துடன் 5-ஆவது முறையாக மோதிக்கொண்ட நிலையில், அதில் சென் 3-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா். காமன்வெல்த் விளையாட்டுகளில் தங்கம் வென்றவரான லக்ஷயா, அடுத்ததாக காலிறுதியில் ஜப்பானின் கொடாய் நராவ்காவை சந்திக்கிறாா்.

இதனிடையே, ஆடவா் இரட்டையா் காலிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி கூட்டணி 16-21, 19-21 என்ற கேம்களில் மலேசியாவின் ஆரோன் சியா/சோ வூய் யிக் இணையிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com