ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் இலங்கையை எதிர்த்து விளையாடிய ஆப்கானிஸ்தான் 175 ரன்கள் குவித்துள்ளது.
ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றுகள் இன்று தொடங்கின. இன்று முதல் ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சசாய் மற்றும் ரஹ்மானுல்லா களமிறங்கினர். சசாய் 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதையும் படிக்க: டி20 உலகக் கோப்பை அணியில் ஜடேஜா இல்லை, இந்தியாவுக்கு பின்னடைவு
இதனையடுத்து, ரஹ்மானுல்லா மற்றும் இப்ராஹீம் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி ரன்களைக் குவித்தது. இப்ராஹீம் 40 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். சிறப்பாக விளையாடிய ரஹ்மானுல்லா அரைசதம் அடித்து அசத்தினார். சிறப்பாக விளையாடிய அவர் 45 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும்.
ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் நஜிபுல்லா 17 ரன்கள் குவிக்க ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது.
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்கியுள்ளது.