பாகிஸ்தான் இலங்கையை லேசாக நினைக்கக் கூடாது: முன்னாள் வீரர் கருத்து 

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் இலங்கையை லேசாக நினைக்கக் கூடாது என முன்னாள் இந்திய வீரர் விஜய் தாஹியா கருத்துத் தெரிவித்துள்ளார். 
பாகிஸ்தான் இலங்கையை லேசாக நினைக்கக் கூடாது: முன்னாள் வீரர் கருத்து 

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் இலங்கையை லேசாக நினைக்கக் கூடாது என முன்னாள் இந்திய வீரர் விஜய் தாஹியா கருத்துத் தெரிவித்துள்ளார். 

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இன்று மாலை துபையில் மோதுகின்றன. ஆசியக் கோப்பையை இதுவரை இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் சாம்பியன் ஆகியுள்ளன. கடைசியாக இலங்கை 2014-ஆம் ஆண்டிலும், பாகிஸ்தான் 2012-ஆம் ஆண்டிலும் கோப்பை வென்றுள்ளன. 

“சூப்பர் 4 சுற்றில் அபாரமாக விளையாடி பாகிஸ்தானை வென்ற இலங்கை அணி தன்னம்பிக்கையுடன் இறுதிப் போட்டிக்கு வரும். இது பாகிஸ்தானுக்கு சோதனை ஆட்டமாக இருந்தாலும் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை லேசாக நினைத்து விளையாடக்கூடாது. அதுவும் இலங்கை டாஸ் வென்றால் அதன் பலம் அதிகம். தேவையான இடத்தில் தேவையான வீரர்கள் இருப்பதால் வெற்றிக்கான அறிகுறியாக இலங்கை அணி திகழ்கிறது” என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆங்கில சேனல் ஒன்றுக்கு கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com