ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 ஆட்டம் இன்று (செப்டம்பர் 23) நாக்பூரில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக இன்றைய ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் 8 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடத்தப்படுகிறது. 3 போட்டிகள் டி20 தொடரில் ஆஸ்திரேலியா முதல் டி20 ஆட்டத்தில் இந்தியாவை தோற்கடித்தது. இதன்மூலம் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.
இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது. அதே நேரத்தில் முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை இழக்காமல் இருப்பதற்கான முனைப்பில் களமிறங்குகிறது.