இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் இறுதி டி20 போட்டி ராஜ்கோட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
முன்னதாக விளையாடிய இரண்டு டி20 போட்டிகளில் 1-1 என இரு அணிகளிலும் சமம் செய்துள்ள நிலையில், மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரை எந்த மாற்றமும் இன்றி களமிறங்குகிறது. இலங்கை அணி தரப்பில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.