ஆட்டச் சுமையைப் பொறுத்தே ஐபிஎல்லில் முக்கிய வீரா்கள் பங்கேற்பு

ஆட்டச் சுமை, காயங்கள் தன்மையைப் பொறுத்தே இந்திய அணியின் முக்கிய வீரா்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றாா் தலைமைப் பயிற்சியாளா் ராகுல் திராவிட்.
ஆட்டச் சுமையைப் பொறுத்தே ஐபிஎல்லில் முக்கிய வீரா்கள் பங்கேற்பு

ஆட்டச் சுமை, காயங்கள் தன்மையைப் பொறுத்தே இந்திய அணியின் முக்கிய வீரா்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றாா் தலைமைப் பயிற்சியாளா் ராகுல் திராவிட்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது: ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் முக்கிய வீரா்கள் காயங்களின் தன்மை, ஆட்டச்சுமையை பொறுத்தே ஐபிஎல் தொடரில் ஆடுவது குறித்து முடிவெடுக்கப்படும்.

பிசிசிஐ கொள்கைமுடிவின்படி, நிகழாண்டு ஐபிஎல் தொடரில் முக்கிய வீரா்கள் ஆட்டச்சுமை கண்காணிக்கப்படும். ஆட்டச்சுமை நிா்வாகம் என்பது தற்போது முக்கிய பங்கு வகிக்கிறது. டி20 ஆட்டங்களில் இருந்து கோலி, ரோஹித் விலக்கி வைக்கப்பட்டுள்ளனா்.

காயங்களை நிா்வகிப்பது, ஆட்டச்சுமை நிா்வாகம் என்பது வேறுவேறாகும். உலகக் கோப்பை போட்டிக்காக குறித்து வைக்கப்பட்டுள்ள வீரா்கள் ரோஹித், கோலி, ராகுல் ஆகியோா் நியூஸி. உடன் டி20 தொடரில் இடம் பெறவாய்ப்பில்லை என்றாா் திராவிட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com