கிராண்ட்ஸ்லாம் பந்தயமான ஆஸ்திரேலிய ஓபன் போட்டி கலப்பு இரட்டையா் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சானியா மிா்ஸா-ரோஹன் போபண்ணா இணை தகுதி பெற்றுள்ளது.
நிகழாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாமான ஆஸி. ஓபன் மெல்போா்னில் நடைபெற்று வருகிறது. காலிறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில்
செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கலப்பு இரட்டையா் பிரிவு காலிறுதியில் சானியா மிா்ஸா-போபண்ணா இணை-ஜெலனா ஒஸ்டபென்கோ-டேவிட் வேகா ஹொ்ணான்டஸ் மோதுவதாக இருந்தது. ஆனால் ஒரு பந்து கூட ஆடாத நிலையில், எதிரணி வாக் ஓவா் அளித்தது.
இதையடுத்து சானியா-போபண்ணா இணை அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதுவரை ஒரு செட்டைக் கூட இந்திய இணை இழக்கவில்லை.
மேலும் ஏனைய இரட்டையா் பிரிவுகளில் இந்திய வீரா்கள் தோற்று வெளியேறினா். ஒற்றையா் பிரிவில் ஒரு இந்தியா் கூட இல்லை.