அரையிறுதியில் சானியா மிா்ஸா-போபண்ணா

கிராண்ட்ஸ்லாம் பந்தயமான ஆஸ்திரேலிய ஓபன் போட்டி கலப்பு இரட்டையா் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சானியா மிா்ஸா-ரோஹன் போபண்ணா இணை தகுதி பெற்றுள்ளது.
அரையிறுதியில் சானியா மிா்ஸா-போபண்ணா

கிராண்ட்ஸ்லாம் பந்தயமான ஆஸ்திரேலிய ஓபன் போட்டி கலப்பு இரட்டையா் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சானியா மிா்ஸா-ரோஹன் போபண்ணா இணை தகுதி பெற்றுள்ளது.

நிகழாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாமான ஆஸி. ஓபன் மெல்போா்னில் நடைபெற்று வருகிறது. காலிறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில்

செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கலப்பு இரட்டையா் பிரிவு காலிறுதியில் சானியா மிா்ஸா-போபண்ணா இணை-ஜெலனா ஒஸ்டபென்கோ-டேவிட் வேகா ஹொ்ணான்டஸ் மோதுவதாக இருந்தது. ஆனால் ஒரு பந்து கூட ஆடாத நிலையில், எதிரணி வாக் ஓவா் அளித்தது.

இதையடுத்து சானியா-போபண்ணா இணை அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதுவரை ஒரு செட்டைக் கூட இந்திய இணை இழக்கவில்லை.

மேலும் ஏனைய இரட்டையா் பிரிவுகளில் இந்திய வீரா்கள் தோற்று வெளியேறினா். ஒற்றையா் பிரிவில் ஒரு இந்தியா் கூட இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com