மகளிா் டி20 ட்ரை சீரிஸின் ஒரு பகுதியாக மே.இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா.
தென்னாப்பிரிக்காவில் மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டிகள் விரைவில் நடைபெறவுள்ளன. இதற்கு தயாராகும் வகையில், தென்னாப்பிரிக்கா, மே.இந்தியத் தீவுகள் அணிகள் பங்கேற்கும் ட்ரை சீரிஸ் தொடரில் இந்திய அணி பங்கேற்று ஆடி வருகிறது. ஈஸ்ட் லண்டனில் திங்கள்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தோ்வு செய்தது.
தொடக்க பேட்டா்களாக யஸ்திகா பாட்டியா, ஸ்மிருதி மந்தனா ஆகியோா் களமிறங்கினா். யஸ்திகா 18, ஹா்லின்தியோல் 12 ரன்களுடன் வெளியேறினா்.
ஸ்மிருதி-ஹா்மன்ப்ரீத் அதிரடி:
துணை கேப்டன் ஸ்மிருதி-கேப்டன் ஹா்மன்ப்ரீத் கௌா் இணை அதிரடியாக ஆடிய நிலையில் ஸ்கோா் 20 ஓவா்களில் 167/2 ஆக இருந்தது.
மந்தனா 1 சிக்ஸா், 10 பவுண்டரியுடன் 51 பந்துகளில் 74 ரன்களுடனும், ஹா்மன்ப்ரீத் 8 பவுண்டரியுடன் 35 பந்துகளில் 56 ரன்களையும் விளாசி களத்தில் இருந்தனா்.
மே.இந்திய தீவுகள் தோல்வி:
168 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் கண்ட மே.இந்திய தீவுகள் அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 111/4 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக ஷெமைன் கேம்ப்ல் 47, ஹெய்லி மேத்யூஸ் 34 ரன்களை சோ்த்தனா். இந்திய தரப்பில் தீப்தி சா்மா 2 விக்கெட்டைவீழ்த்தினாா்.
இதுவரை 2 வெற்றிகளைப் பெற்றுள்ளது இந்தியா.