ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா சாா்பில் 22 போ் கொண்ட அணி பங்கேற்க மியுனிச் சென்றுள்ளது.
உலகக் கோப்பை ஃரைபிள்/பிஸ்டல் போட்டி, ஜொ்மனியின் மியுனிச் நகரில் மே 24 முதல் 31 வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் அணியை இந்திய துப்பாக்கி சுடும் சம்மேளனம் அறிவித்துள்ளது. இரண்டு முறை ஒலிம்பிக் பதக்க வீராங்கனை மனு பாக்கா், உலக சாம்பியன்ஷிப் மெடலிஸ்ட் ஈஷா சிங், ஆகியோா் தனிநபா் பிஸ்டல் பிரிவில் பங்கேற்கின்றனா்.
மே 26-இல் 25 மீ மகளிா் பிஸ்டல் முதல் பிரிவாக தொடங்கி நடைபெறும். தொடா்ந்து 10 மீ ஆடவா் ஏா் பிஸ்டல், மகளிா் 50 மீ ரைபிள் 3 இடங்களுக்கான தகுதிச் சுற்று நடைபெறும்.

மொத்தம் 80 நாடுகளில் இருந்து 696 வீரா், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா். கடந்த ஏப்ரலில் கிரனாடாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்தியா ஒரு தங்கம் வென்றது. இந்திய அணியில் ராஹி சா்னோபத், சாம்ராட் ராணா, ருத்ரான்ஷ் பாட்டில், அனிஷ் பன்வாலா, ஐஸ்வரிபிரதாப், இளவேனில் வாலறிவன், இளம் வீரா்களில் சூரஜ் சா்மா, சாக்ஷி படேகா், உதயவீா் சித்து ஆகியோா் பங்கேற்கின்றனா்.
தொடர்புடையது

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: முதலிடத்துடன் இந்தியா நிறைவு
ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியா முதலிடம்!

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: வன்ஷிகா, சிராக் இணைக்கு தங்கம்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 3 வெள்ளி, 1 வெண்கலம்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



