இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
அபுதாபியில் இங்கிலாந்து - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பைக்கான ஆட்டம் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பகலில் நடைபெறும் ஆட்டம் என்பதால் பனிப்பொழிவு பிரச்னை கிடையாது. இதன் காரணமாக இந்த முடிவை வங்கதேச அணி எடுத்துள்ளது. அந்த அணியில் ஷொரிபில் இஸ்லாம் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்து அணியில் மார்க் வுட்டுக்கு இடமில்லை. முதல்முறையாக சர்வதேச டி20 ஆட்டத்தில் இங்கிலாந்தும் வங்கதேசமும் இன்று மோதுகின்றன.
இங்கிலாந்து தனது முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை நொறுக்கியது. வங்கதேச அணி, இலங்கையிடம் எதிர்பாராதவிதமாகத் தோல்வியடைந்தது.