திருவள்ளூர், பிப். 11: திருவள்ளூரில் அரசு பஸ் நடத்துநர் மாரடைப்பால் இறந்தார்.
÷சென்னை தேனாம்பேட்டை வீட்டுவசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்தவர் நடராஜன் (56). இவர் திருவள்ளூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் நடத்துநராக வேலை செய்து வந்தார்.
÷இவர் வெள்ளிக்கிழமை இரவு பணி முடிந்து பணிமனையில் இருந்து வெளியே வந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்த அவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நடராஜனைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
÷திருவள்ளூர் நகர போலீஸôர் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.