சாலை விபத்தில் அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள் 2 பேர் சாவு

காஞ்சிபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே ஓசூர் வீட்டு வசதி வாரிய அண்ணா பொதுத் தொழிலாளர் சங்கத் தலைவர், செயலாளர் ஆகிய இருவரும் இறந்தனர்.
சாலை விபத்தில் அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள் 2 பேர் சாவு

காஞ்சிபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே ஓசூர் வீட்டு வசதி வாரிய அண்ணா பொதுத் தொழிலாளர் சங்கத் தலைவர், செயலாளர் ஆகிய இருவரும் இறந்தனர்.

ஓசூர் வீட்டுவசதி வாரிய அலுவலக இளநிலை உதவியாளர்கள் ரவிச்சந்திரன் (52), சிட்டிபாபு (50). இவர்கள் முறையே ஓசூர் வீட்டு வசதி வாரிய அண்ணா பொதுத் தொழிலாளர் சங்கத் தலைவர், செயலாளர்களாக இருந்தனர்.

இவர்கள் சென்னை நந்தனத்தில் சங்க அலுவலக திறப்பு விழாவுக்காக ஓசூரில் இருந்து வியாழக்கிழமை காலை காரில் புறப்பட்டனர். இவர்களுடன் ஓசூர் வீட்டுவசதி வாரிய அலுவலக உதவிக் கோட்டப் பொறியாளர்கள் காந்தி (52), ஏகசேனன் (45), உதவிப் பொறியாளர் ரங்கநாதன் (45), இளநிலை உதவியாளர் அண்ணாமலை (40), அலுவலக உதவியாளர் நடராஜன் (53) ஆகியோரும் அதே காரில் சென்னை சென்றனர். காரை ஓசூரைச் சேர்ந்த மதுகுமார் (35) ஓட்டினார்.

கார் காஞ்சிபுரத்தை அடுத்த சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேடல் அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்புச் சுவரைத் தாண்டி எதிர்பக்க சாலையில் புகுந்தது. அப்போது சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வந்த அரசு பஸ் அந்த கார் மீது மோதியது. இதில் கார் தூக்கி வீசி எறியப்பட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ரவிச்சந்திரன், சிட்டிபாபு ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

நடராஜன், டிரைவர் மதுகுமார், ரங்கநாதன், ஏகசேனன் ஆகியோர் காஞ்சிபுரம் அரசு மருத்துமனையிலும், அண்ணாமலை, காந்தி ஆகியோர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தாலுக்கா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com