ராஜபட்ச வருகையை எதிர்த்து போராட்டம்: 32 பேர் கைது

இலங்கை அதிபர் ராஜபட்ச வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவையில் ரயில் மறியலுக்கு முயன்ற தமிழ்ப் புலிகள் அமைப்பினர் உள்பட 32 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

இலங்கை அதிபர் ராஜபட்ச வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவையில் ரயில் மறியலுக்கு முயன்ற தமிழ்ப் புலிகள் அமைப்பினர் உள்பட 32 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

ராஜபட்சவை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று வலுயுறுத்தி, கோவை தமிழ்ப் புலிகள் அமைப்பினர் வியாழக்கிழமை ரயில் மறியல் செய்ய முயன்றனர். கோவை ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்ற அவர்கள் 18 பேரை ரேஸ்கோர்ஸ் போலீஸார் கைது செய்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மத்திய கலால் மற்றும் சுங்க வரி அலுவலகத்துக்குள் புகுந்து சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக அவர்கள் 14 பேரை ரேஸ்கோர்ஸ் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com