மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சி அறிவித்துள்ளது.
அந்தக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.
சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவர் வெள்ளிக்கிழமை சந்தித்தார்.
வாழ்வுரிமை கட்சியின் பொதுச்செயலாளர் காவேரி, இணைப் பொதுச்செயலாளர் எம்.எஸ்.சண்முகம், அமைப்புச் செயலாளர் காமராஜ், தொழிற்சங்கத் தலைவர் கே.வி.சிவராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபடுவதாக முதல்வர் ஜெயலலிதாவிடம் வேல்முருகன் தெரிவித்தார்.
சரத்குமார் ஆதரவு: ஜெயலலிதாவை, சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமாரும் வெள்ளிக்கிழமை சந்தித்து, மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார். ஜெயலலிதாவுக்கு முன்கூட்டியே பிறந்த நாள் வாழ்த்தும் சரத்குமார் கூறினார்.