ஈழத்தில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் வடசென்னை மாவட்டம், கொளத்தூர் பகுதி பெரவள்ளூர் சதுக்கத்தில் நேற்று 27.11.2015 மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், புலவர் புலமைப்பித்தன், பெ.மணியரசன், ஓவியர் வீரசந்தானம், இயக்குநர் கௌதமன், நாகை திருவள்ளுவன், கி.வே.பொன்னையன், கவிஞர் மணிவேந்தன், வடசென்னை மாவட்டச் செயலாளர் சு.ஜீவன், கொளத்தூர் பகுதிச் செயலாளர் ஜி.ஆர்.பிஞானம், உதயம் ராதா உள்ளிட்ட தமிழர் ஆர்வலர்கள், கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்