கட்சிக்காக அனைத்தையும் இழந்திருக்கிறேன்: கண்கலங்கினார் சந்திரகுமார்

தேமுதிகவுக்காகவும், தலைவர் விஜயகாந்துக்காகவும் வாழ்க்கையில் அனைத்தையும் இழந்திருக்கிறேன் என்று கூறிய தேமுதிக எம்எல்ஏ சந்திரகுமார் செய்தியாளர் சந்திப்பின் போது கண்கலங்கினார்.
கட்சிக்காக அனைத்தையும் இழந்திருக்கிறேன்: கண்கலங்கினார் சந்திரகுமார்

சென்னை : தேமுதிகவுக்காகவும், தலைவர் விஜயகாந்துக்காகவும் வாழ்க்கையில் அனைத்தையும் இழந்திருக்கிறேன் என்று கூறிய தேமுதிக எம்எல்ஏ சந்திரகுமார் செய்தியாளர் சந்திப்பின் போது கண்கலங்கினார்.

தேமுதிக கட்சி ஆரம்பிக்கப்பட்டதும், நான் என் குடும்பத்தை விட்டுவிட்டு விஜயகாந்துடன் வந்தேன். அன்றைய நாள் முதல் தேமுதிக கட்சிக்காகவும், தலைவர் விஜயகாந்துக்காகவும் அனைத்தையும் இழந்திருக்கிறேன்.

என் வாழ்க்கையில் குடும்பத்தோடோ, என் குழந்தைகளோடோ இருந்ததில்லை. என் வீட்டைக் கட்டியபோது கூட, அதனை திறக்க, தலைவர் வர வேண்டும் என்பதற்காக பல லட்சம் செலவு செய்தேன் என்று கண்கலங்கியபடி பேசினார் சந்திரகுமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com