நெய்வேலி: கடலூரில் அருகே உள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பெயரை மத்திய அரசு மாற்றியுள்ளது.
இனி என்.எல். சி இந்தியா நிறுவனம் என அழைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. மேலும் என்எல்சி பெயரை மாற்றக்கூடாது என தமிழக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும் பெயரை மாற்றியுள்ளது மத்திய அரசு.
என்எல்சி 100% பங்கில் மத்திய அரசு 90% பங்குகளையும், தமிழக அரசு 5% பங்குகளையும், மிச்சமுள்ள 5% பங்குகளை என்எல்சி நிறுவன ஊழியர்கள் வைத்துள்ளனர்.