வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்டிபிஐ) இணைந்து போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் தலைவர் தெஹக்லான் பாகவி கூறினார். சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை, எஸ்டிபிஐ கட்சியினர் சனிக்கிழமை சந்தித்துப் பேசினர். இதன் பின்னர் தெஹக்லான் பாகவி செய்தியாளர்களிடம் கூறியது:
வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவுடன் இணைந்து போட்டியிட உள்ளோம். திமுக தலைமையில் மதச்சார்பற்ற அணி வலுவாக அமையும். வரும் தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றிபெறும் என்றார்.