மே 17அன்று பிளஸ் 2 தேர்வு முடிவு! பத்தாம் வகுப்புக்கு மே 25 !

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 17-ம் தேதி வெளியாகும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மே 17அன்று பிளஸ் 2 தேர்வு முடிவு! பத்தாம் வகுப்புக்கு மே 25 !

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 17-ம் தேதி வெளியாகும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 1-ம் தேதி நிறைவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை எழுதியுள்ளனர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 17-ம் தேதி காலை 10.30 முதல் 11 மணிக்குள் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் www tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www. dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 25-ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகம் மற்றும்ப புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13 வரை நடைபெற்றது. இத்தேர்வில் மொத்தம் 10.72 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com