தென்மேற்கு பருவக்காற்றால் தணிந்தது வெப்பம்!

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கியுள்ளதால் கடந்த இரு நாள்களாக வெப்பம் தணிந்து காணப்படுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கியுள்ளதால் கடந்த இரு நாள்களாக வெப்பம் தணிந்து காணப்படுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் கேரளத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசத் துவங்கி உள்ளதன் காரணமாகவே பல இடங்களில் வெப்பம் தணிந்து காணப்படுகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 இடங்களில் வெயில் சதம்: இதற்கிடையே, தமிழகத்தில் வியாழக்கிழமை 3 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் பதிவானது. அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் 103 டிகிரி வெயில் பதிவானது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதன்கிழமை காலை நிலவரப்படி தொண்டியில் 26 மி.மீ., அதிராமபட்டினத்தில் 24 மி.மீ., மழை பதிவானது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையும், ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய மழையும் பெய்யும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழையும், ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய மழையும் பெய்யும் என்றனர்.

வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்)

பாளையங்கோட்டை 103
மதுரை 101
அதிராமபட்டினம் 100
திருச்சி 99
சென்னை, திருத்தணி 98

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com