

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நிலுவையில் உள்ள நீட் தேர்வு தொடர்பான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி, உயர்நீதிமன்ற பதிவாளர் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு (நீட்) மே 7-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி மதுரையைச் சேர்ந்த ஜொனிலா, சூர்யா, சித்தார்த், அஜய் சரண் உள்ளிட்ட 9 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதில், பல்வேறு மொழிகளில் நடந்த இந்த தேர்வில் வினாத்தாள் ஒரே மாதிரியாக வழங்கப்படவில்லை. சில மொழிகளில் எளிமையாகவும், சில மொழிகளில் கடினமாகவும் தேர்வு இருந்தது. இதனால் மருத்துவ படிப்புக்கான மாணவர்களை தேர்வு செய்வதற்கான ஒரே அளவீடாக இந்த தேர்வு அமையாது என அதில் குறிப்பிட்டிருந்தனர்.
இதற்கு சிபிஎஸ்இ தரப்பிலும் தமிழக அரசு தரப்பிலும் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மனுவை விசாரித்த நீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது. விசாரணை ஜூன் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நிலுவையில் உள்ள நீட் தேர்வு தொடர்பான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுவதாகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீட் தேர்வு வழக்குகளோடு அவற்றை பட்டியலிடவும் உயர்நீதிமன்ற பதிவாளர் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.