தீபாவளி பண்டிகைக்கான ரயில்களில் முன்பதிவு இன்று தொடக்கம்

தீபாவளி பண்டிகைக்கான ரயில் பயணச் சீட்டு முன்பதிவு வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் தொடங்கப்படவுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கான ரயில்களில் முன்பதிவு இன்று தொடக்கம்
Published on
Updated on
1 min read

தீபாவளி பண்டிகைக்கான ரயில் பயணச் சீட்டு முன்பதிவு வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் தொடங்கப்படவுள்ளது.
இந்தாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி வருகிறது. பண்டிகை காலங்களில் பயணச் சீட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்ற சூழல் உருவாகி வருகிறது. அதை தவிர்க்கும் பொருட்டு 120 நாட்களுக்கு முன்பாகவே முன் பதிவு செய்யும் திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ரயில்வே அறிமுகப்படுத்தியது.
அதனடிப்படையில் தீபாவளி பண்டிகைக்கு நான்கு நாள்கள் முன்பாக அதாவது அக்டோபர் 14 ஆம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் ஜூன் 16 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் முன்பதிவு செய்யலாம்.
முன்பதிவு மற்றும் பயணத் தேதி:
அக்டோபர் 15 ஆம் தேதி செல்பவர்கள் ஜூன் 17 ஆம் தேதி முன்பதிவு
அக்டோபர் 16 ஆம் தேதி செல்பவர்கள் ஜூன் 18 ஆம் தேதி முன்பதிவு
அக்டோபர் 17 ஆம் தேதி செல்பவர்கள் ஜூன் 19 ஆம் ú ததி முன்பதிவு
அக்டோபர் 18 ஆம் தேதி செல்பவர்கள் ஜூன் 20 ஆம் தேதி முன்பதிவு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com