

சென்னை: வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று இரவு பரவலாக பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆராய்ச்சி நிபுணர் பிரதீப் கூறியுள்ளார்.
இது குறித்து தனது பேஸ்புக்கில் அவர் கூறியிருப்பதாவது, வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று இரவும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்யும். பல இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.
அரக்கோணம், குடியாத்தம், பள்ளிகொண்டா, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திண்டிவனம், சிவகங்கை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்யும். திருநெல்வேலியில் பல இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
இன்று மாலை அல்லது இரவு பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர், கிருஷ்ணகிரி மாவட்டம், தருமபுரி, நாமக்கல், வேலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் திண்டுக்கல் பகுதிகளுக்கு இன்று கோடை விருந்துதான். திருச்சியில் மழை பெய்தால், அம்மாவட்ட மக்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று 108 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் கடுமையான வெப்பம் பதிவாகியுள்ள நிலையில், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என்ற அறிவிப்பு சென்னைவாசிகளுக்கு ஆதங்கத்தையே ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.