கார்பைட் கல் வைத்து பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோடை காலத்தில் மாம்பழ சீசன் என்பதால் அதன் விற்பனையும் அதிகரிக்கும். மக்கள் மாம்பழங்களை உண்ண அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரத்தின் பல பகுதிகளில் கார்பைட் கற்களை வைத்து வியாபாரிகள் மாம்பழங்களை பழுக்க வைப்பதாகவும், இதனால் வயிற்று வலி, வாந்தி போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே காஞ்சிபுரம் நகரில் விற்கப்படும் மாம்பழங்களின் தரத்தை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.