புலிகள் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்குகிறது

வனப் பகுதிகளில் புலிகள் குறித்த கணக்கெடுப்புப் பணி இன்று தொடங்குகிறது.
புலிகள் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்குகிறது
Updated on
1 min read

வனப் பகுதிகளில் புலிகள் குறித்த கணக்கெடுப்புப் பணி இன்று தொடங்குகிறது.

ஆண்டுதோறும் கோடைக் காலத்தில் புலிகள் குறித்த கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டுக்கான புலிகள் குறித்த கணக்கெடுப்புப் பணி இன்று தொடங்குகிறது. இப்பணிக்கான பயிற்சி முகாம் அட்டகட்டி வனத் துறை பயிற்சி மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வன அலுவலர் சுப்பையா தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமில், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட 6 வனச் சரகங்களைச் சேர்ந்த  வனச் சரகர்கள், வனவர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து 8 நாள்களுக்கு நடைபெற இருப்பதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com