மீனவர்கள் பிரச்னையில் தனிக் கவனம் தேவை: ஜி.கே.வாசன்

மீனவர்கள் பிரச்னையில் மத்திய அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
மீனவர்கள் பிரச்னையில் தனிக் கவனம் தேவை: ஜி.கே.வாசன்
Updated on
1 min read

மீனவர்கள் பிரச்னையில் மத்திய அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களது ஒரு விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் பிரச்னையில் மத்திய அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகளினால் நல்ல தீர்வு எட்டப்படவில்லை. இனிமேலும் பொறுமை காக்காமல் இலங்கையோடு கண்டிப்போடு பேசி தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இலங்கைச் சிறையில் உள்ள 11 மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட 135 விசைப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com