கோவை: சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை உயர்வு

கோவையில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை  5 ஆக உயர்ந்துள்ளது.
file photo
file photo
Published on
Updated on
1 min read


கோவை: கோவையில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை  5 ஆக உயர்ந்துள்ளது.

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள சோமனூரில் மழை காரணமாக பேருந்து நிலைய மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி 5 பேர் பலியானார்கள். 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். முதல்கட்டமாக, பேருந்து நடத்துநர் சிவக்குமார் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com