புதுவையில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சென்னை பயணம்

புதுச்சேரியில் கடந்த 16 நாள்களாக தங்கியுள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் முதன்முறையாக அனைவரும் இன்று சென்னை புறப்பட்டுச்சென்றனர்.
புதுவையில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சென்னை பயணம்
Updated on
1 min read

புதுச்சேரியில் கடந்த 16 நாள்களாக தங்கியுள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் முதன்முறையாக அனைவரும் இன்று சென்னை புறப்பட்டுச் சென்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் டிடிவி தினகரன் அணிக்கு 21 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் புதுச்சேரி அடுத்த சின்னவீராம்பட்டினத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் தங்கி உள்ளனர்.

இடையில் சில எம்.எல்.ஏக்கள் தங்கள் தொகுதிக்கு சென்று பணிகளை பார்வையிட்டு வந்தனர். எனினும் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து சொகுசு விடுதியிலேயே தங்கி உள்ளனர். கடந்த 2-ம் தேதி டிடிவி தினகரன் நேரில் வந்து எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்திச் சென்றனர்.

இதற்கிடையே எடப்பாடி அரசுக்கு ஆதரவு வாபஸ் பெறுவதாக ஆளுநருக்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடிதம் அளித்திருந்தனர். அதன் மீது தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் விளக்கம் தரும்படி அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதற்கு ஏற்கெனவே சில எம்.எல்.ஏக்கள் சென்னைக்கு சென்றுநேரில் விளக்கம் அளித்தனர்.

இதற்கிடையே ஆளுநர் வித்யாசாகர் ராவ் வியாழக்கிழமை தினகரன் தன்னை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கி உள்ளார்.  இந்நிலையில்  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக கடிதம் அளித்து 16 நாட்கள் ஆகியும் இதுவரை ஆளுநரிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. இதனால் தினகரன் தலைமையில் 10 பேர் அவரை சந்திக்க உள்ளனர்.

ஆளுநரை சந்திக்கும்போது என்ன மாதிரியான கோரிக்கைகளை முன்வைப்பது குறித்து ஆலோசிப்பதற்காக தினகரன் இல்லத்தில் அவரது ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தெரிகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தற்போது புதுச்சேரி விடுதியில் தங்கியுள்ள 17 சட்டப்பேரவை உறுப்பினர்களும் காலை புதுச்சேரியிலிருந்து தினகரன் இல்லத்திற்கு சென்றனர். மேலும் வெளியூர்களுக்கு சென்றுள்ள தங்கதமிழ்செல்வன், பழனியப்பன் உள்ளிட்ட நான்கு உறுப்பினர்களும் தினகரன் இல்லத்திற்கு நேரடியாக வரவுள்ளதாக தெரிகிறது.

தினகரன் இல்லத்தில் ஆலோசனை  நடத்திவிட்டு, ஆளுநரை சந்தித்த பின்னர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீண்டும் புதுச்சேரிக்கு திரும்புவார்கள் என்றும் கூறப்படுகிறது. கடந்த 16 நாட்களாக புதுச்சேரியில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக முதல் முறையாக சென்னைக்கு செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com