எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரும் மனுவை தமிழக அரசு புதன்கிழமை தாக்கல் செய்தது.
எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் மார்ச் 20-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான கொடுமைகள் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கருத்து தெரிவித்தது. மேலும், இச்சட்டத்தின் கீழ் புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி அல்லது தனிநபரை உடனடியாகக் கைது செய்யக் கூடாது. உயரதிகாரிகளின் அனுமதி பெற்று விசாரணை நடத்த வேண்டும். முதல்கட்ட விசாரணையை டிஎஸ்பி அந்தஸ்தில் உள்ள அதிகாரி விசாரிக்க வேண்டும். அதன்பிறகு புகாரில் அடிப்படை ஆதாரம் இருந்தால் கைது செய்யலாம். பொய்ப் புகார்கள் மூலம் அப்பாவிகள் பாதிக்கப்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.
இத்தீர்ப்புக் கு எதிராக நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (எஸ்சி/எஸ்டி) வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அந்த சட்டப் பிரிவுகளை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும், நாட்டில் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் கடந்த வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி கேரளம் ஏற்கெனவே மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இதனிடையே, வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சீராய்வு செய்யக் கோரும் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்யும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
இதன்படி, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு மனு புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'சமூகத்தின் பாதுகாவலராக மாநில அரசு விளங்குகிறது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (எஸ்சி/எஸ்டி) வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் உள்ளது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோரின் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்க வேண்டி இந்த மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்படுகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விரைவில் இந்திய - அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம்! எஸ். ஜெய்சங்கா் - ரூபியோ பேச்சில் முடிவு!

ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழு

இணையவழியில் சொத்துவரி செலுத்தும் 75% போ்!
பிறந்து 9 நாள்களே ஆன பெண் குழந்தை கடத்தல்: 5 மணி நேரத்தில் மீட்பு; பெண் கைது
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



