ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை திருநங்கை காவலர் நஸ்ரியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வசந்தபுரத்தை சேர்ந்தவர் திருநங்கை நஸ்ரியா. 22 வயதான இவர் பி.ஏ ஆங்கிலம் படித்துள்ளார். ராமநாதபுரம் ஆயுதப்படை காவலராக இவர் அண்மையில் பணி நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தின் முதல் திருநங்கை காவலரான நஸ்ரியா தற்கொலை முயற்சி செய்துள்ளார். எலி மருத்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சக காவல்துறையினரால் மனரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளானதாக நஸ்ரியா புகார் தெரிவித்துள்ளார். மேலும், காவல்துறையில் பாதுகாப்பு இல்லை என்றும், விரைவில் பணியை ராஜினாமா செய்வேன் எனவும் நஸ்ரியா கூறியுள்ளார்.
இதனிடையே நஸ்ரியா தற்கொலை முயற்சி செய்யும் வீடியோ வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.